125.KEELNELLI

20/11/2016
கீழ்நெல்லி
அருள்மிகு நெல்லீசுவரர்  திருக்கோவில் , காஞ்சிபுரம் - செய்யாறு செல்லும் வழியில் வெண்காடு கூட்டுரோடு வழியே பாடல் பெற்று திருத்தலமாகிய வன்பார்தான் பனங்காட்டூர் வழியே பில்லன்தாங்களில் இடது புறம் திரும்பி 3 km ல் இப்பதி உள்ளது .பழைய கோவில் சிதிலமடைந்து ஒருபெரியவர் 25 ஆண்டிற்கு முன் செங்கல் கொண்டு சுவர் எழுப்பி ஊரில் சிலர் தடுத்ததால் அப்படியே விட்டுவிட்டார்.இன்று திருவருளால் மேற்கூரை அமைத்து வழிபாடு செய்து வந்தோம்.இத்திருப்பணிக்கான செலவினை திருமதி.ஹேமாசுகுமாரன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார் .கிராம மக்கள் பூசு வேலை செய்து தரை போட்டு திருப்பணி செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள் .










124.SIRUMAIYILOOR

06/11/2016
சிறுமயிலூர்-
அருள்மிகு சிறு மயிலீசுவரர் திருக்கோவில் , சிறுமயிலூர் -செங்கல்பட்டு -பழைய சீவரம் -திருமுக்கூடல்-நெல்வாய் ரோட்டில் 6 கீமி ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,திரிபுரசுந்தரி அம்மை,கணபதி,முருகன்,நந்தியம் பெருமான் ,சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மேற்கூரை திருப்பணியும் திருவேள்வியும் சிறப்பாக நடைபெற்றது.மேற்கூரை செலவினை நமது சிவசபை அன்பர் திருமதி .ஹேமலதா சுகுமாறன் அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு-8870196961, 7810061883 ,8760233195

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு