57.SIRUVANGUNAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

08/06/2014
சிறுவங்குணம் - அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் .இத்திருப்பணி நமது சிவசபைக்கு எம்பெருமான் கொடுத்த அருட்கொடையாகும் .சுவாமியின் அழகை வார்த்தைகளால் கூற இயலாது .நம்முடைய நெற்றி புருவம் கூட சுவாமியின் திருமேனியில் தெரிகிறது .அனைவரும் காண வேண்டிய அற்புத திருமேனியாகும் .இங்கு சுவாமி , அம்பாள் , நந்திதேவர் பிரதிஷ்டையுடன் , மேற்கூரையும் அமைத்து வழிபாடு இனிதே நடைபெற்றது .இங்கு அமைத்த மேற்கூரை 10  அடிக்கு 20 அடி நீலமுள்ளது .இதற்கான செலவில் இக்கிராமமக்கள் Rs .10000 நம் சிவசபைக்கு வழங்கினார்கள் .

தொடர்புக்கு - திரு .உதயகுமார் -9443110019 , திரு .ஏழுமலை -9626340515
i ) திருப்பணிக்குப் பின்பு

ii


iii

iv


v

vi

56.SIRUVANGUNAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

08/06/2014

சிறுவங்குணம் - அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோவில் .ரோடு ஓரத்தில்  வைத்திருக்கும் சுவாமிக்கு திருவருளால் மேற்கூரை அமைக்கப்பட்டது .

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

55.ARAPAEDU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

01/06/2014
அறப்பேடு - அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் , அச்சிறுப்பக்கம் தாண்டி 2km ல்  ஹோட்டல் ஹரிதம் சேர்ந்து இடது பிரியும் வழியில் 1 km ல் இவ்வூர் உள்ளது . சுவாமி பச்சை நிறம் கொண்ட சிவலிங்க திருமேனியாக அருள்பாலிக்கிறார் . நந்திதேவர் மூர்த்தம் பழுது பட்டிருந்தது .ஸ்தபதியை வரச்செய்து சரிசெய்து திருவருளால் சுவாமி பிரதிஷ்டையும் , நந்திதேவர் பிரதிஷ்டையும் செய்து , மேற்கூரை அமைத்து வழிபாடு இனிதே தொடங்கியது . இந்த மேற்கூரைக்கான செலவு தொகையான Rs .15000 லண்டன் சிவத்திரு .வேதநாராயணன் ஐயா  அவர்கள் வழங்கி உள்ளார்கள் .

தொடர்புக்கு - திரு .முருகன்- 9940950136

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii )

iv )

v )