103.SANGEETHAMANGALAM

23/08/2015
சங்கீதமங்கலம் - அருள்மிகு சங்கீதமங்கலேசுவரர் திருக்கோவில் ,சிவபெருமான் கருணையினால் 23/08/2015 அன்று சிவலிங்க திருமேனியை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைது , சுவாமி இருந்த அதே இடத்தில் உயர்த்தி ,செங்கல் கட்டிடமாக அமைக்க முடிவு செய்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டது .



27/09/2015
சங்கீதமங்கலம் - 27/09/2015 அன்று  உயர்த்தி அமைக்கப்பட்ட பீடத்தில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது .விரைவில் திருக்கோவில் அமையவுள்ளது .
தொடர்புக்கு - திரு.கேசவன் - 9442308460, திருமதி.சுஷீலா -8754486379.








102.ALISOOR

20/09/2015

அளிசூர் - அருள்மிகு அருளானீஸ்வரர் திருக்கோவில் , உத்திரமேரூர்- கனியாம்பூண்டி வழியாக இவ்வூரை அடையலாம்.மேல்கூரையின்  விமானம் சிதிலமடைந்த விழுந்து , சுவாமி வானம்பார்த்து  இருக்கும் நிலையில் இன்று மேற்கூரை அமைத்து வழிபாடு செய்யப்பட்டது .மேலும் திருக்கோவிலில் மேல்தளத்திலுள்ள  மரம் செடி புதர்கள் அகற்றப்பட்டது. திருக்கோவிலின் முன் பகுதியிலுள்ள  புதர்கள் நீக்கப்பட்டது .இத்திருப்பணி செய்த செலவுவகைக்கு ரூ .10000 திரு.விஸ்வநாதர் ஐயா  நம் சிவசபைக்கு  வழங்கியுள்ளார்கள் . 
தொடர்புக்கு- திரு.முனுசாமி - 9942835852.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு





101.SENANGKAARANI

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

06/09/2015
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் ,சென்னங்காரணி -பெரியபாளையம் -தண்டலம் வழியாக இவ்வூரை அடையலாம் .

20/05/2012 
அன்று சுவாமி பிரதிஷ்டை செய்து குடிசையால் கூரை அமைத்தோம்.தற்போது அவ்வூரில் மேற்கூரைக்கான பொருட்களை வாங்கி கொடுத்தார்கள் .இன்று இறைவர்க்கு சிமெண்ட் ஓடுகளால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டது.இத்திருக்கோவிலில் தின பூசை தொடர்ந்து நடந்து வருகிறது ,விரைவில் இக்கூரை சிவாலயமாக மாறவுள்ளது .
தொடர்புக்கு-திரு.வெங்கடேசன் - 9488510027.

திருப்பணிக்குப் பின்பு