51.SITHAARKAADU


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

09/02/2014
சித்தார்காடு- செய்யூரிலிருந்து 9 km ல் இவ்வூர் உள்ளது . பாளையூரின் அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமி வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .


27/04/2014
அருள்மிகு சித்தீசுவரர் திருக்கோவில் , சித்தார்காடு. சிவபெருமான் திருவருளால் பச்சை நிறமுடைய மிக பழைமையான இச்சிவலிங்கத் திருமேனியையும் , நந்திதேவரையும்  உயர்த்தி பிரதிஷ்டை செய்து . 10அடிக்கு 20 அடி நீளமுள்ள மேற்கூரை அமைத்து வந்தோம் .இக்கிராமமக்கள் Rs . 10000 வழங்கினார்கள் .

தொடர்புக்கு - 9626122937 , 9047738037 , 9962267358.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv
v


50.VIPPAEDU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

20/04/2014

அருள்மிகு பானேசுவரர்  திருக்கோவில்  , விப்பேடு .காஞ்சிபுரத்திலிருந்து 8km ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , ஆவுடையார் செங்கலில் கட்டியும் , மேற்கூரை அமைத்தும் வந்தோம் சிவ.கண்ணன் ஐயாவும் அவரது திருக்கூட்டமும் நமது சிவசபைக்கு Rs . 15000 வழங்கி இத்திருப்பணிக்கான செலவினை ஏற்றார்கள் .இது போன்று ஒவ்வொரு சைவ அமைப்பும் சுவாமிக்கு ஒரு மேற்கூரையாவது அமைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டால் மிக விரைவில் வெட்ட வெளியில் பூசை இல்லாத சிவலிங்க திருமேனி இல்லாதநிலை உருவாகும் .
தொடர்புக்கு - சிவ.கண்ணன் -9940539580 , சிவ .அபிமண்யூ -8940612587.


i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii


iv
v

49.AYANAMBAKKAM

அருள்மிகு திருமேனி அழகர் திருக்கோவில்,கீழ் அயனம்பக்கம் ,சென்னை -95. இத்திருக்கோவில் அருகே திரு.M .K .விஜயகுமார் அன்பர் உள்ளார் அவரிடம் தொடர்பு கொண்டதில் அவர் திருக்கோவில் அமைக்கும் முழு பொறுப்பை ஏற்பதாக உறுதி அளித்துள்ளார் .26/06/2013 அன்று ஸதபதியை அழைத்து பேசப்பட்டது .

.
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

06/04/2014
அயனம்பாக்கம்- பொன்னியம்மன் நகர் , சென்னை .
ஆவுடையார் முழுவதும் மண்ணில் புதைந்து நிலையில் சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமியை உயர்த்தி பிரதீஷ்டை செய்து , நந்திதேவரையும் பிரதீஷ்டை செய்து வந்தோம் .இங்கு விரைவில் திருப்பணி நடைபெற உள்ளதால் அங்குள்ள அன்பர் திரு.ஜெயக்குமார் அவர்கள் சுவாமிக்கு மேல் குடிசை அமைத்துள்ளார் .

தொடர்புக்கு - திரு.ஜெயகுமார்-9840726777.

i) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii)

iv )


v )