70.MATHOOR

05/09/2014
மதூர்
செங்கல்பட்டில்லிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பழையசீவரம் இடதுபுறம் திரும்பி பாலாறு கடந்து திருமுக்கூடல் அடுத்து வலதுபுறம் சென்று இவ்வூரை அடையலாம் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

21/09/2014
மதூர்- அருள்மிகு மதுவனேசுவரர் திருக்கோவில் .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் நடந்தேறியது. இத்திருப்பணிக்கு திருமதி.காயத்ரிவாசன் அவர்கள் தங்கள் நண்பர்கள் , உறவினர் வழியே தொகையை பெற்று தன்னுடைய நன்கொடையையும் சேர்த்து மொத்தம் Rs .20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர். செப்டம்பர் மாதம் வெளிவந்த ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் இவர்கள் சிறுகதை முதலிடம் பெற்று வெளிவந்துள்ளது .
தொடர்புக்கு - திரு .முத்து- 9445486554. 

i ) திருப்பணிக்குப் பின்பு

ii)

iii)

iv)

v)

69. MINNAL

10/08/2014
மின்னல் - அரக்கோனத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் சாலை எனும் ஊர் இடதுபுறம் திரும்ப 1kmல்  இவ்வூர் உள்ளது .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

07/09/2014
மின்னல் - அருள்மிகு ஆனந்த ஈசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமியை எடுத்து நேராக பிரதீச்டை செய்து மேற்கூரை அமைக்கப்பட்டது.இக்கிரம அன்பர்கள் 500 க்கு  மேல் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள் .இக்கிரமமக்கள் ரூ .20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர் .

தொடர்புக்கு - திரு.ரமனையா அவர்கள்  - 9500123362 ,திரு.தனஞ்செயன் அவர்கள் - 9444870811.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii)

iii)

iv)

v)

68.ENCHAMBAKKAM


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


31/08/2014
ஈஞ்சம்பாக்கம் - அருள்மிகு சுந்தர மகாலிங்கேசுவரர் திருக்கோவில் , சென்னை-115. பிரத்னா தேயேடர் அடுத்து இரண்டாவது வலதில் (opp கைலாஷ் ஹோட்டல் ) தண்டு துலுக்கானத்தம்மன் கோவில் இடதுபுறம் கடைசியில் கோவில் குளக்கரையில் வானம்பார்த்து அருள்பாலித்து வந்த சுவாமியை அவர் அருளால் உயர்த்தி பிரதிஷ்டை செய்து மேற்கூரை அமைத்து வழிபாடு இனிதே நடைபெற்றது .
தொடர்புக்கு- சிவ .M .ராஜசேகர் -9789821198



i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v