131 ,132 & 133 .VELLORE

05/03/2017

வேல்லூர்- ( மணலி -திருவெள்ளவாயில் - வயலூர்- இடது புறம் திரும்பி பின் வலது புறம் திரும்ப இவ்வூர் உள்ளது .

அ ) அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் ,மிக பழமைவாய்ந்த இச்சிவலிங்க திருமேனிக்கு ஆவுடையார் செய்தவர்கள் சரியான அளவு செய்யாததால் பொருந்தாமல் இருந்தது.நம் சிவசபை ஸ்தபதி  வைத்து சரிசெய்து சுவாமி பிரதிஷ்ட்டை இன்று நடந்தேறியது .சுவாமிக்கு மேற்கூரை இக்கிராம மக்கள் அமைத்தனர்.திருப்பணி தொடங்கியுள்ளது .
தொடர்புக்கு- திரு.அசோக்-9944267901.






ஆ ) அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் . பூமியில் பல நூற்றாண்டுகளாக புதைந்திருந்த பச்சை நிற சிவலிங்க திருமேனியை எடுத்து அருகில் வைத்துள்ளோம் . கிராமமக்களை ஆவுடையார் செய்யும் படி பணிந்துள்ளோம்   விரைவில் சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரை பணியும் நடைபெறும்.
தொடர்புக்கு - 9600196662



இ )மண்ணில் படுத்தபடி பாதி புதைந்து நிலையில் இருந்த இச்சிவலிங்கத்தை சுவாமி திருவருளால் நேர் செய்து வைத்துள்ளோம் .









130. ALISOOR

19/02/2017
அழிசூர் -அருள்மிகு வள்ளலீசுவரர் திருக்கோவில்  (உத்திரமேரூரிலிருந்து களியாம்பூண்டி வழியாக இவ்வூரை அடையலாம் )
சிவபெருமான் கருணையால் இன்று ஏரிக்கரை பள்ளத்தில் அருள்பாலித்து வந்த பெருமானை எடுத்து ,பின்பு பள்ளத்தில் மண் கொட்டி உயர்த்தி சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரை பணியும் நடைபெற்றது .
இத்திருப்பணிக்கான தொகையை திருமதி.ஹேமா சுகுமாரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 8098515704,9976629446.
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு